இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்துவைத்தார். 2017ல் பிரதமர் மோதியால் அடிக்கல் நாட்டப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1.470 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு இன்று ஒருநாள் பயணமாக வந்துள்ளார். அப்போது பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார்.

அதன்பின், எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் பார்வையிட்ட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரூ.1470 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த மருத்துவமனையில் 18 சிறப்பு சிகிச்சைவார்டுகளும், 17சூப்பர் ஸ்பாஷலிட்டி பிரிவுகளும், 18 நவீன அறுவை சிகிச்சை மையங்களும் உள்ளன. இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திவாஹர்

Leave a Reply