தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போரிடையே கர்பா நடனம் பிரபலமடைந்து வருவது குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்ள வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் ட்விட்டருக்கு பதிலளித்துப், பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“விளையாட்டுப் போட்டிகள் சுவாரசியமானவை, ஏனெனில் அவை வீரர்களுக்குப் பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்டவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போரிடையே கர்பா நடனம் பிரபலமடைந்து வருவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply