பயங்கர சப்தத்துடன் வெடித்த சிலிண்டர்!-பலூன் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலி!-திருச்சியில் நடந்த துயரம்.

திருச்சி மெயின்கார்டு கேட் தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள போத்தீஸ் கடை அருகே இன்று (02.10.2022) இரவு சுமார் 08:30 மணி அளவில் பயங்கர சப்தத்துடன் பலூனுக்கு நிரப்பப்படும் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பலூன் வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டம் நிலவியது. சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply