ரஷ்யா – யுக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலையை பல நாடுகள் வரவேற்றுள்ளது! -வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர்.

ரஷ்யா – யுக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலையை பல நாடுகள் வரவேற்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைதி பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாண்பதே இந்தியாவின் நோக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.

எந்தவொரு விவகாரத்திற்கும் இந்தியா பொருத்தமான முடிவையே மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.உலகின் பல நாடுகள் இந்தியா எடுக்கும் முடிவை எதிர்பார்த்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவின் ராஜ்ய உறவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இந்தியா – அமெரிக்கா இடையே தொழில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக கூறினார்.சீனாவுடன் நட்புறவை பாராட்ட விரும்புவதாகவும், இருதரப்பும் அதனை உணர்ந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply