அறிவியல் சார்ந்த குணங்களை உருவாக்கி மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கோவில்களாக இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் திகழ்கின்றன!-தர்மேந்திர பிரதான்.

சென்னை ஐஐடி-யின் 2021 – 27 –ம் ஆண்டின் உத்திகளைக் கொண்ட திட்டத்தை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் வகையில் எரிசக்தி நுகர்வை குறைப்பதற்கான கோட்டக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோட்டக் ஐஐடிஎம் எரிசக்தி சேமிப்பு இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.  இளநிலை அறிவியல் படிப்பில், தரவு அறிவியல் பிரிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், கல்வி சிறப்பு மற்றும் நாட்டை கட்டமைக்கும் பணிகளுக்கு இது போன்ற முன்னெடுப்புகளை தொடங்கியதற்காக அனைவருக்கும் வாழ்த்துக்கைளத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் வெறும் கல்வி நிறுவனங்களாக அல்லாமல் அறிவியல் சார்ந்த குணங்களை உருவாக்கி மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கோவில்களாகத் திகழ்கின்றன. மூளை ஆராய்ச்சி மையத்தின் பயன்களை பெறுவதற்காக உலக நாடுகள் அனைத்தும் சென்னை ஐஐடி-யை நாடி வரும் தருணம் வெகு தூரத்தில் இல்லை என்று அவர் தெரிவித்தார். சென்னை ஐஐடி-யின் தொழில்நுட்ப வலிமை காரணமாக 2023-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் 5-ஜி சேவை நடைமுறைக்கு வரும் என்று தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply