கடற்கரை தூய்மை இயக்கத்தை சென்னையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்த தினத்தையொட்டி, கடற்கரை தூய்மை இயக்கத்தை சென்னையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் தொடங்கி வைத்தார்.இதன் ஒருபகுதியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.கடலிலோ, கடற்கரை பகுதியிலோ பிளாஸ்டிக் மட்டுமின்றி, இதர குப்பைகளையும் போடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் 75 கடற்கரை பகுதிகளில் கடந்த ஜுலை மாதம் 5-ஆம் தேதி முதல், கடலோர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply