நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை காந்திமதியம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆனித்தேரோட்டம் அண்மையில் விமர்சியாக நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கும்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.

எஸ்.திவ்யா

Leave a Reply