நெல்லையில் ஒருவர் வெட்டி படுகொலை!-இரவு நேரத்தில் நடந்த பயங்கரம்!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 28.11.2021 அன்று இரவு 9 மணி அளவில் வெள்ளாங்குளியைச் சேர்ந்த ஆறுமுகம் வயது 50 என்பவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரவநல்லூர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த செய்தியை நாம் பதிவேற்றம் செய்யும் வரை, குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply