‘கொரோனா’ நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு!- கோவா தெற்கு மாவட்டத்தில் நடந்த துயரம்.

கோவா தெற்கு மாவட்டத்தில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் டேங்கரில் இருந்து திடீரென ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply