வந்தவாசி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில ஆடித்திருவிழா.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 39-ம் ஆண்டு கூழ்வார்த்தல் ஆடித்திருவிழா, ஆதிசக்தி ஸ்ரீ சர்வ மங்கள காளி சக்தி பீடம் அருட்சக்தி இலட்சுமண சுவாமிகள் தலைமையில்  நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் ஏந்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடைபெற்றுஅம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

                      ஆ.கன்னியப்பன்.

Leave a Reply