செங்கம் பெருமாள் கோவில் கருடசேவை விழா ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள்கோவில் ‘மகா கருடசேவை விழா’ வரும் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த திருவிழாவை பல்வேறு சமுதாயத்தினரும் மற்றும் உபயதாரர்கள் நடத்துகின்றனர். இதுகுறித்து உபயதாரர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரூராட்சி, நெடுஞ்சாலைதுறை, மின்வாரியம் ஆகிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழாவில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாமல், திருவிழா நடத்திடவும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

அனைவருக்கும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பரமேஷ்வரி கருடசேவை விழா அழைப்பிதழ் மற்றும் பூ பிரசாதங்கள் வழங்கினார்.

-செங்கம் சரவணக்குமார்.

Leave a Reply