பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் கைது!

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்களை திருவெறும்பூர் போலிசார் கைது செய்தபோது.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள்  பள்ளிக்கு செல்லாமல் இன்று ஆர்ப்பாட்டத்திலும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலிசார் கைது செய்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply