கிராமங்களை நோக்கிப் படையெடுக்கும் அ.ம.மு.க நிர்வாகிகள்!- அதிமுக, திமுக தொண்டர்களை வளைக்க முயற்சி.

திமுக-வை போல, அ.ம.மு.க நிர்வாகிகளும் தற்போது கிராமங்களை நோக்கிப் படையெடுக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி, திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையகுறிச்சி, குவளக்குடி, கீழமுல்லைகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி. கிளியூர் மற்றும் பத்தாளப்பேட்டை ஊராட்சிகளில் இன்று கட்சி கொடியினை, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில அண்ணா தொழிற் சங்க பேரவை இணைச்செயலாளர் கலைச்செல்வன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் திரிசங்கு. ஒன்றிய துணைசெயலாளர் ராஜலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சந்திரகுமார், முத்துகுமார் உட்பட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply