மது போதையில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்!

சேலம் மாவட்டம், ஏற்காடு, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பிலிப்குமார் மகன் கண்ணன், (வயது 27) திருமணமாகத இவர், ஏற்காட்டில் வாடகை கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இன்று மாலை மது அருந்திய கண்ணன், ஏற்காடு பேருந்து நிலையம் பின்புறம் நின்று தனது அக்காவிற்கு செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

ஒரு இளைஞனின் மது மயக்கமும், செல்போன் பேச்சும், நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழக்க காரணமாகியிருக்கிறது.

-நவீன் குமார்.

 

One Response

  1. MANIMARAN December 26, 2018 10:41 pm

Leave a Reply