கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செர்வைட் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது!

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், தென்னாடார் ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்காக அவர்களுக்கு நிவாரணம் வழங்கும்பொருட்டு நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் வாய்மேடு அருகில் உள்ள தென்னாடார் ஊராட்சியில் உள்ள 500 குடும்பங்களுக்கும், அதேபோல் கருப்பம்புலம் அருகில் உள்ள கடினல்வாயில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், பிரட், பிஸ்கட்,  அரிசி மளிகைப் பொருட்கள், புடவை, வேஷ்டி, கைலி, சட்டை, டி-சர்ட், போர்வை, துண்டு, நாப்கின், டார்ச் லைட், கொசு வர்த்தி சுருள், மிளகுவர்த்தி, சோப்பு, பிளாஸ்டிக் வாளி கொசுவலை, தார்பாய் ஆகியவற்றை வழங்கினார்கள்.

தென்னாடார், கடினல்வாயில் ஆகிய ஊராட்சிகள் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியாகும். 

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply