தண்ணீர் இறைக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி! 

சேலம் மாவட்டம், ஏற்காடு, போட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகள் கீர்த்திகா,வயது 14, ஏற்காடு நாசரேத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்படுவதற்கு முன்பு, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது ராட்டிணம் கழன்டு, மாணவி கீர்த்திகா கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து மாணவியை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீர்த்திகாவை பரிசோதித்த மருத்தவர், கீர்த்திகா உயிரிழந்ததாக தெரிவித்தார்.

10–ம் வகுப்பு மாணவி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-நவீன்குமார்.

Leave a Reply