குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த போக்குவரத்து தலைமை காவலர்!

மதுரை மாநகர் மேலவடம்போக்கித் தெரு திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பில் சாலை பழுதடைந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றம் சாலையில் பணியில் இருந்த தலைமை காவலர் கிருஷ்ணன் (பணி எண்:1780) 08.10.2018 அன்று அதற்கென நேரத்தை செலவிட்டு, ஜல்லி மற்றும் தார் கலந்து குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீர் செய்தார்.

அவருக்கு ஒரு ஆட்டோ டிரைவர் ஒத்தாசையாக இருந்து கூடமாட வேலை செய்துள்ளார்.

அவரது சிறந்த பணியினை, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டியுள்ளார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply