நிர்மலா தேவி விவகாரம்: நக்கீரன் மஞ்சள் பத்திரிகை!- ஆளுநர் மாளிகை கடும் விமர்சனம்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். (File Photo,)

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

மிகுந்த திகைப்புடனும், கவலையுடனும் இந்த செய்தி அறிக்கை வெளியிடப்படுகிறது. திருவள்ளுவர் முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய தத்துவார்த்த தலைவர்களையும், மிகப்பெரிய கலாச்சாரத்தையும் கொண்ட நாடு இந்தியா.

தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நேர்மை, உண்மை மற்றும் நல்லவை பக்கம் நிற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

சமூகவிரோத சக்திகள் சமூகத்தை தங்கள் கையில் எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் காலத்திலிருந்து மகாத்மா காந்தி எப்போதும் உண்மை மற்றும் நல்லவற்றுக்கான பாதையில் அச்சம் தவிர்த்து உறுதியாக நிற்கவேண்டும் என்று மக்களுக்கு போதித்திருக்கிறார்.

ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ, அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி என்பவருக்கும் தொடர்பு என்ற செய்தியில் துளியளவு உண்மையும் இல்லை, அந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை.

போலீஸிடம் நிர்மலாதேவி கொடுத்த வாக்கு மூலம் உண்மைக்கு மாறானது. மாநிலத்தின் முதல் குடிமகன் மீது ஆபாசமான, கோழைத்தனமான தாக்குதலை சகிக்கும் பொறுமையை இழந்த பிறகே பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்துவதாக சிலர் கூறுவது நகைப்புக்குரியது.

எல்லா விஷயங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. கடந்த ஆறுமாதங்களாக, நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டப்படியான விசாரணைகள் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக வைக்கப்படுவதை கண்ணியம் நிறைந்த அமைதியுடன் கவனித்து வருகிறது.

செப்டம்பரில் எல்லா விசாரணையும் நிறைவு பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் நக்கீரன் இதழில் மஞ்சள் பத்திரிகை போன்று வெளியிடப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

புலனாய்வு இதழியல் என்று சொல்லிக் கொள்கிறவர்கள், நிர்மலாதேவி போலீஸிடம் கொடுத்த உண்மையான வாக்குமூலத்தை சரிபார்க்க வேண்டும் என்றுகூட கவலைப்படவில்லை.

நக்கீரன் வெளியிட்ட கட்டுரையில் இதழியல் ஒழுக்கம் மீறப்பட்டுள்ளது. நிர்மலாதேவி கடந்த ஒரு ஆண்டில் எப்போதும் ராஜ்பவனுக்குள் நுழைந்ததில்லை. ஆளுநரையோ, அவருடைய செயலாளரையோ, ஆளுநர் மாளிகை ஊழியர்களையோ சந்தித்ததில்லை.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்னை தெரஸா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர், மதுரை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியதில்லை. அப்போது அவருடைய ஆளுநருடைய செயலாளர் உடன் செல்லவில்லை.

நக்கீரனில் வெளியிடப்பட்ட கட்டுரையில் உண்மைக்கும் நேர்மைக்கும் மாறாக வெறுப்புணர்வுதான் அதிகமாக இருக்கிறது.

நக்கீரனின் இப்படி போலியான, மஞ்சள் பத்திரிகை தரத்திலான கட்டுரைக்கு மரியாதைக்குரிய நபர்களும் ஆதரவு அளிப்பது வருத்தம் தருகிறது. அவர்களுக்கு நிஜம் தெரியவில்லை என்பதைத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

சுப்பிரமணிய பாரதி, வ.உ.சி, அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், அப்துல்கலாம் போன்றோர் தங்களுடைய சிந்தனைகளாலும், பேச்சாலும் நடவடிக்கைகளாலும் இந்த மாநிலத்தை கவுரவப்படுத்தினார்கள்.

மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் மாளிகை ஒருபோதும் எல்லை மீறி அதீதமாக பயன்படுத்தியதில்லை. தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் சட்டப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டது.

ஜனநாயகத்தில் ஆரோக்கியமான கருத்துகள் பரிமாறப்படலாம், ஆனால், நேரடியாகவே, மறைமுகமாகவோ, ஆளுநரை நோக்கி விடுக்கப்பட்டால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் மாளிகை பணிந்துவிடாது.

இவ்வாறு தமிழக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply