டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோதியை சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டார். டெல்லி சென்ற அவருக்கு அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மக்களவைக்கு தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியின் நாளை சந்திப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply