வங்கி கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் கார் விபத்தில் பலி! – விடியற் காலையில் நடந்த விபரீதம்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் மூன்றாண்டுகளுக்கு முன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன். தற்போது ஜாமினில் வெளியில் சுதந்திரமாக சுற்றி வந்துள்ளார்.

இவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஒடுக்கூரைச் சேர்ந்த கோபாலகிருஷணனை தேடி 4 போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். போலீசாரைக் கண்டதும், கோபாலகிருஷ்ணனும், அவரது தம்பி செல்வராஜூம் காரில் தப்பி சென்றனர். போலீசார் அவர்களது காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர்.

இந்நிலையில், மாத்துார் அருகே உள்ள ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் அதிவேகமாக சென்ற கொள்ளையனின் கார் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது. இதில் கொள்ளையன் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து மாத்துார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து (FIR NO: 130/2018) விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply