சுற்றுலா பயணிகள் சென்ற வேன் மீது காட்டெருமை மோதி விபத்து!

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சென்னையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது உறவினர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் ஏற்காட்டை சேர்ந்த சுற்றுலா வேனில் ஏற்காட்டை சுற்றி பார்க்க புறப்பட்டனர். வேனை, ஏற்காடு பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் தங்கவேல்(30) என்பவர் ஓட்டியுள்ளார். சுமார் காலை 10 மணியளவில் வேன் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் வலது புற வனப்பகுதியில் இருந்த காட்டெருமை ஒன்று வேன் மீது தாவி குதித்து மோதியது பின்னர் உடனடியாக சாலையின் இடதுபுற வனப்பகுதிக்குள் தாவி குதித்து ஓடி மறைந்தது.

இந்த விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது சேதமடைந்தது. மேலும் வாகனத்தின் முன்பாகம் பெரியளவில் சேதமடைந்தது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ஓட்டுனர், சுற்றுலா பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பகல் நேரத்தில் காட்டெருமை சாலையில் குதித்து ஓடியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

-நவீன் குமார்.

 

Leave a Reply