திருச்சி, செட்டியார் பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளப் பேட்டை கிராமம், திருமஞ்சன செட்டி தெரு, பிளாட் எண் 10, மேட்டுத் தெரு என்ற முகவரியைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் மகன் ஷேக் இஸ்மாயில் (வயது  21) என்பவர், பத்தாளப்பேட்டையில் இருந்து திருவெறும்பூர் நோக்கி ஓட்டி வந்த Hero Honda TN-48 B-5320 என்ற இரு சக்கர வாகனமும், திருவெறும்பூரில் இருந்து பத்தாளப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த TN-45 AB-4765 என்ற செல்வராணி தண்ணீர் லாரியும், செட்டியார் பேட்டை என்ற இடத்தில் இன்று (02.09.2018) காலை சுமார் 11.00 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், மேற்படி இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேக் இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண்மணி பலத்த காயமடைந்தார். அவருடைய நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply