தார்சாலை மற்றும் கழிவுநீர் சாக்கடை அமைக்காதக் காரணத்தால் சேறும் சகதியுமாக சீரழிந்து போய் கிடக்கும் சாலை!-பொள்ளாச்சி அருகே பொதுமக்கள் அவதி.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் மேம்பாலப் பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும், தார்சாலை மற்றும் கழிவுநீர் சாக்கடை அமைக்காதக் காரணத்தால், அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக சீரழிந்து போய் கிடக்கிறது.

இந்த வழியாகதான் சீனிவாசபுரம், வசியாபுரம், குஞ்சி பாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டும். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர்.

கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுவதால், அப்பகுதி முழுவதும் துற்நாற்றம் வீசுகிறது.

எனவே, சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகள் இப்பகுதியை நேரில் பார்வையிட்டு, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்களா?

-தாமோதரன்.

Leave a Reply