ஏற்காடு மலைப்பாதையில் பஸ் மீது லாரி மோதி விபத்து.

 

சேலம் மாவட்டம், ஏற்காடு மலை்பாதையில் இன்று பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. சேலத்தில் இருந்து ஏற்காட்டை நோக்கி  அரசு பேருந்து  மலைப்பாதையில் சென்று கொண்டிருந்து. பஸ்சை சின்னதாஸ் என்பவர்  ஓட்டி சென்றுள்ளார். பேருந்து மலைப்பாதையின் 2 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி எதிர்பாராத நேரத்தில் அரசு பஸ் மீது மோதியது. லாரியை சேலம் 5-ரோடு பகுதியை சேர்ந்த பிரதாப்(35) என்பவர் ஓட்டியுள்ளார். இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

-நவீன் குமார்.

 

Leave a Reply