அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காணொளி வகுப்புகள் தொடங்கப்பட்டது!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2018-  19 கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பூமாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு இன்று கணினி அறிவியல், சதுரங்கம், யோகா, அபாகஸ், நீதி நெறி கல்வி ஆகியவற்றை கற்றுக்கொள்ள ஏதுவாக சிறப்பு வகுப்புகளும் மற்றும் “ஸ்மார்ட் கிளாஸ்” வகுப்பும் இன்று தொடங்கப்பட்டது.

– கே.பி.சுகுமார்.

 

 

Leave a Reply