திருச்சி, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் ‘தெப்ப திருவிழா’ நடைப்பெற்றது.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தெப்ப திருவிழா’ நேற்று இரவு நடைப்பெற்றது.

மலைக்கோவில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

24-ம் தேதி திருக்கல்யாணமும், 27-ம் தேதி தேர் திருவிழாவும், 30-ம் தேதி தெப்பதிருவிழா நடைப்பெற்றது. தெப்ப திருவிழாவில் கோவிலின் எதிரே உள்ள பிரம்மன் தீர்த்தமாகிய சந்நிதி திருக்குளத்தில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் எழுந்தருளி தெப்பகுளத்தில் 3 முறை வலம் வந்து பொதுமக்களுக்கு அருள்பாளித்தார்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மலர்களால் இருந்த உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply