தூத்துக்குடி மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை! காவல்துறையை அடித்தது, கலெக்டர் ஆபிசை கொளுத்தியது எல்லாமே சமூக விரோதிகள்தான்!- நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி எங்கேயும் நிகழக்கூடாது, தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார். உளவுத்துறை தோல்வியால் தூத்துக்குடியில் வன்முறை ஏற்பட்டது. எந்த பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. காவல்துறையை அடித்தது, கலெக்டர் ஆபிசை கொளுத்தியது எல்லாமே சமூக விரோதிகள்தான். சமூக விரோதிகள் போலீசாரை அடித்தனர். இதன் பிறகு தான் பிரச்சனை ஆரம்பமானது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை எப்படி கெடுத்தனரோ, அதே போல் தூத்துக்குடியில் கெடுத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை வெளியே கொண்டு வந்து காட்ட வேண்டும்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

-ஆர்.மார்ஷல்., எஸ்.திவ்யா.

Leave a Reply