ஆபத்தான நிலையில் பழுதான மின்கம்பம் – அலட்சியம் காட்டும் மின்வாரியம்!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுக்கா எல்லைக்குட்பட்ட செட்டியக்காபாளையம் எனும் கிராமத்தில் உள்ள மின் கம்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழுந்து கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இக்கிராமத்திற்கென தனிப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை.

இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். என்வே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தாமோதரன்.

Leave a Reply