தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருச்சி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

திருச்சி கே.கே.நகர் அருகில் கே.சாத்தனூரில் அமைந்துள்ள அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (AIMAN College of Arts and Science for Women) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 28.03.2018 அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அன்று சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வழிப்பட உள்ளார். ஆளுநர் வருகையையொட்டி, திருச்சி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 –டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply