மத்திய அரசை கண்டித்து திருச்சியில் முற்றுகை போராட்டம்..

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகே நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து இன்று திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பு மக்கள் அதிகார அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு தலைமை வகித்தார். மாநில பொருளாளர் காளியப்பன் மற்றும் தலைமை குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் முன்னிலை வகித்தனர். திருச்சி நிர்வாகி செழியன், ஜீவா, ராஜா மற்றும் விவசாய சங்க நிர்வாகி சின்னதுரை, நந்தகுமார், தெய்வக்கண்ணு மற்றும் ம.க.இ.க கலைகுழுவின் கோவன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

-ச.ராஜா.

Leave a Reply