திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஆர்பிஎப் டிஐஜி சோனல் மிஸ்ரா, ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மத்திய அரசு பணிக்கு செல்கிறார்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண், சென்னை வணிக குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளர் ஸயூல் ஹாக்யு, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply