“நாரி சக்தி புரஸ்கார் விருது”  பெற்ற பெண்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

 

உலக மகளிர் தினத்தையொட்டி, பெண்களின் முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்புக்காக, மத்திய அரசு ஆண்டு தோறும்நாரி சக்தி புரஸ்கார்’ என்ற விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுநாரி சக்தி புரஸ்கார்” விருதுகளை பெற்ற பெண்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோதி இன்று புது தில்லியில் கலந்து உரையாடினார். அவர்களுக்கு வாழ்த்தும்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ஸ்ரீ ராகேஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். 

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply