1974-ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டது தி.மு.க: திருவாரூரில் எச்.ராஜா பேட்டி.

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டதுஇந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார்.

அதன் பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது தி.மு..தான், 1974-ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதும் தி.மு..தான், காவிரி பற்றி பேசக்கூடாது; வாய்திறக்கக்கூடாது; இதற்காக தினமும் 100 தோப்புக்கரணம் போட வேண்டும்.

பிரதமர் மோடி தமிழகத்தின் அனைத்துக்கட்சியினரை சந்திக்க மறுப்பு தெரிவிக்கவில்லைஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் பொய் கூறி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றுவார்.

தி.மு.., .தி.மு.., இன துரோகிகள்; டெல்டா பாசன விவசாயிகள் முதுகில் குத்திய துரோகிகள்; டெல்டா மாவட்டம் தவிர, பிற மாவட்ட ஆறுகள் பாலைவனமாக மாறிவிட்டது. இதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் தமிழகத்தை  ஆட்சி செய்த   தி.மு.., .தி.மு.., ஆற்று மணலை கொள்ளை அடித்ததுதான்.

தமிழகமும், கர்நாடகமும் எங்களுக்கு இரண்டு கண்கள் போன்றது. கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

.குமரன்.

Leave a Reply