திருச்சி – கல்லணை சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் வித்யாலயா இண்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா, இன்று (03.03.2018) மாலை 6.50 மணிக்கு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி தற்போது நடைப்பெற்று வருகிறது.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் முதல்வர் சாத்தப்பன், தாளாளர் சிவகாமி சாத்தப்பன் ஆகியோர் வரவேற்றனர்.
திருச்சி விஸ்வநாதன் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், நிர்வாகியுமான மருத்துவர் ஜெயபால், தேவக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ராமநாதன் ஆகியோர், இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பிருந்தாவன் வித்யாலயா இண்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
இன்று இரவு 10.30 மணிவரை விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
–கே.பி.சுகுமார்.
படங்கள்: துரை திரவியம்.