பொதுத் தேர்வை பயமின்றி எதிர் கொள்ள  “சிகரம் தொடு” என்ற நிகழ்ச்சி திமிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பொதுத்தேர்வை பயமின்றி எதிர் கொள்ளவும், தேர்வில் அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்ற நல்லணெண்ணத்தின் அடிப்படையில், வேலூர் மாவட்ட அரிமா சங்கத்தின் சார்பில் சிகரம் தொடு” என்ற நிகழ்ச்சி இன்று மதியம் 1.30. முதல் 4.30 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அரிமா சங்கத் தலைவர் யோகானந்தம், செயலாளர் விக்னேஷ், பொருளாளர் கமலேஷ் மற்றும் இப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர். மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில பயிற்சியாளர் கல்லழகர் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

                          –மு.ராமராஜ்.

-ச. ரஜினிகாந்த்.

Leave a Reply