பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பிச்சை எடுக்கும் ஆர்பாட்டம்!  

 

தமிழக அரசு, பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர், மாநில இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை தலைமையில் இன்று பிச்சை எடுக்கும் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கருப்பண்ணன், மாநகர தலைவர் முருகன், ஏற்காடு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், ஆறுமுகம், ரவி, குட்டி உட்பட 35 பேர் கலந்துக்கொண்டனர். இவர்கள் தமிழக அரசை கண்டிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பினர்.

-நவீன் குமார்.

 

Leave a Reply