பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திருச்சி சட்ட கல்லூரி  மாணவர்கள் பேரணி!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திருச்சி சட்ட கல்லூரி  மாணவர்கள் சட்ட கல்லூரியில் இருந்து டி.வி.எஸ் டோல்கேட்  நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது ஜமால் முகமது கல்லூரி எதிரில் மாணவர்கள் அனைவரையும் காவல் துறையினர் மறித்தனர். அந்த நேரத்தில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் காவல் துறையால் கைது செயப்பட்டனர்.

-ச.ராஜா.

-ரா.ரிச்சி ரோஸ்வா.

Leave a Reply