திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே விபத்து!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செந்தண்ணீர்புரத்திலிருந்து ஜீ கார்னர் செல்லும் மேம்பாலத்தின் இடையே இன்று (21.01.2018) நள்ளிரவு 12.10 மணியளவில், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. காரிலிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி காவல்துறையினர், லாரிக்கு பின்புறம் காருக்குள் சிக்கியிருந்த நபர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது லாரியின் பின்புறம் சிக்கியிருக்கும் காரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம்   போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரா.ரிச்சி ரோஸ்வா.

Leave a Reply