ஏற்காட்டில் ஊரக சுகாதார இயக்கம் சார்பில் சுகாதார பொங்கல் போட்டிகள்!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஊரக சுகாதார இயக்கம் சார்பில் சுகாதார பொங்கல் விளையாட்டு போட்டிகள் இன்று காலை நடைப்பெற்றது.

விளையாட்டு போட்டிகளை ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சித்ரா துவக்கி வைத்தார். ஏற்காட்டில் உள்ள வெவ்வேறு ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

இன்று நடைப்பறெ்ற கிரிக்கெட் போட்டியில் மஞ்சக்குட்டை ஊராட்சி அணி முதலிடத்தையும், ஏற்காடு ஊராட்சி இரண்டாமிடத்தையும் பிடித்தன.

கைப்பந்து போட்டியில் செம்மநத்தம் ஊராட்சி அணி முதலிடத்தையும், வாழவந்தி ஊராட்சி அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.

கபாடி போட்டியில் ஏற்காடு ஊராட்சி முதலிடத்தையும், மஞ்சக்குட்டை ஊராட்சி இரண்டாமிடத்தையும் பிடித்தன.

பெண்களுக்காக நடத்தப்பட்ட கயிறு இழுக்கும் போட்டியில் மஞ்சக்குட்டை ஊராட்சி முதலிடத்தையும், ஏற்காடு ஊராட்சி இரண்டாமிடத்தையும் பிடித்தன.

போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிக்கு 2 ஆயிரம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த அணிக்கு ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், கலந்துக்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ்களை ஏற்காடு கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்தர் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து ஊராட்சி செயலாளர்களும் செய்திருந்தனர்.

-நவீன் குமார்.

Leave a Reply