உணவு தானிய உற்பத்தியை பெருக்கும் திட்டம்!- விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு வேளாண்துறை அலுவலர்கள் ஆலோசனை!  

ye1201P3

ஏற்காட்டில் உள்ள வேளாண்துறை அலுவலகம் சார்பில், உணவு தானிய உற்பத்தியை பெருக்கும் வகையில்  விவசாய குழுக்களை சார்ந்தவர்களை, அவரவர் விவசாய நிலங்களுக்கே சென்று ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறையை விவரித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 6 உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை சென்று ஆலோசனைகள் வழங்குகின்றனர். இத்திட்டத்தின் இலக்கு இரண்டாம் பசுமை புரட்சியின்  இருமடங்கு உற்பத்தி ஆகும்.                                                                                          

-நவீன்குமார்.