இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார். |
புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 6 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-எஸ்.சதிஸ்சர்மா. |