பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “சார்லி ஹெப்டோ” வார இதழ் தலைமை அலுவலகம் மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதில் 10 பேர் பத்திரிகையாளர்கள், இரண்டு பேர் காவல்துறையினர். மேலும், 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டை அடுத்து அந்த பகுதியை பிரான்ஸ் போலீசார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ஆர்.மார்ஷல்.