கூகிள் நிறுவனம் ‘கூகிள் ஸ்ட்ரீட் வியூ’ என்ற சேவையை 63 நாடுகளில் தொடங்கியுள்ளது. இவற்றில் இலங்கையும் இணைந்துள்ளது.
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமாராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும் என்றும், இதன்மூலம் இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கும் என்றும் தெரிகிறது.
இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை, அருகம்பை முதலான பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் தகவல் சேகரிப்பு திட்டம், விரைவில் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளதென கூகிள் நிறுவனத்தின் அதிகாரிகளில் ஒருவரான ஆன்லின் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதீஸ் சர்மா.