ஏற்காடு கே.புத்தூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி முகாம், சேலம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைப்பெற்றது.
முகாமில் ஏற்காடு ஏரியை தூர்வாற வேண்டி 2 மனுக்களும், முதியோர் உதவிதொகை சம்பந்தமாக 32 மனுக்களும், சாலை வசதி வேண்டி 3 மனுக்களும், தனி நபர் பிரச்சனைக் குறித்து 1 மனுவும், நியாய விலைக்கடை வேண்டி 1 மனுவும், பேருந்து வசதி கோரி 1 மனுவும் கொடுக்கப்பட்டது. இம்முகாமில் 20 பேருக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முகாமில் ஏற்காடு வட்டாட்சியர் சாந்தி, ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை, துணை சேர்மேன் சுரேஷக்குமார், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, வாழவந்தி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
முன்கூட்டியே முறையானபடி மக்களுக்கு தகவல் கொடுக்காததால், முகாமில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
–நவீன் குமார்.