சீர்மரபினர் மற்றும் நரிக்குறவர் நலவாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் மற்றும் நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசு சார்பில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், தற்போது உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம். இது தொடர்பான மேலும் விபரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், நரிக்குறவர் நலவாரியத்தில் இதுவரை உறுப்பினராக பதிவு செய்யாத நரிக்குறவர் இன மக்கள் தற்போது உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலர் அலுவலகத்தை அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பொ.கணேசன் @ இசக்கி.