நடத்தை விதிகளை மீறிய நரேந்திரமோதி மீது வழக்குப் பதிவு!

ஆமதாபாத்தில், நரேந்திரமோதி இன்று (30.04.2014) தனது ஓட்டை பதிவு செய்தார்.

ஆமதாபாத்தில், நரேந்திரமோதி இன்று (30.04.2014) தனது ஓட்டை பதிவு செய்தார்.

பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி போட்டியிடும் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதிக்குட்பட்ட ஆமதாபாத்தில் நரேந்திரமோதி இன்று (30.04.2014) காலை தனது ஓட்டை பதிவு செய்தார். அவர் வந்த போது குழந்தைகள் முதல் பலரும் அவரது காலை தொட்டு வணங்கினர்.

தாமரை பேட்ஜை கையில் எடுத்து தனது விரல் மையை காட்டினார்.

தாமரை பேட்ஜை கையில் எடுத்து தனது விரல் மையை காட்டினார்.

பின்னர் ஓட்டு போட்டு வெளியே வந்த நரேந்திரமோதி, தனது சட்டையில் எப்போதும் அணிந்திருக்கும் தாமரை பேட்ஜை கையில் எடுத்து தனது விரல் மையை காட்டினார். தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனது மொபைலில் படமெடுத்து கொண்டார். வாக்குச் சாவடி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.

தன்னைத்தானே தனது மொபைலில் படமெடுத்து கொண்டார்.

தன்னைத்தானே தனது மொபைலில் படமெடுத்து கொண்டார்.

நரேந்திரமோதியின் இத்தகைய செயலுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளும் தங்கள் தரப்பில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக முறையான வழக்கு பதியுமாறு தேர்தல் கமிஷன், குஜராத் மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நரேந்திரமோதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடி அருகே நடந்தது என்ன என்பது குறித்து முழு அறிக்கை தருமாறு மாவட்ட கலெக்டருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மனிதருள் புனிதர் என்றும், எதிர்காலத்தில் இவர்தான் இந்திய திருநாட்டின் பிரதமர் என்றும், பாரதிய ஜனதா கட்சினரால் பெருமையாக பேசப்பட்டு வரும் நரேந்திரமோதி, தேர்தல் விதிமுறைகளை மீறி தாமரை சின்னத்துடன் வாக்குச் சாவடிக்குள் சென்றதோடு மட்டுமில்லாது, வாக்குச் சாவடி அருகே தாமரை சின்னத்துடன் வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித் துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும், பிரதம வேட்பாளராகவும் இருக்கும் நரேந்திரமோதிக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தெரியுமா? தெரியாதா?

நரேந்திரமோதி இப்படி நடந்து கொண்டது நரித்தனமா? அல்லது பிரியங்கா காந்தி சொன்னதை போல சிறுபிள்ளைத்தனமா?

-டாக்டர்.துரைபெஞ்சமின்.