முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க.வில் இணைந்தார்

tn.cm ramachandranதே.மு.தி.க.வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ பண்ருட்டி ராமச்சந்திரன், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இது தொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று (20.02.2014) முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன், அவருடைய மனைவி சாந்தி இராமச்சந்திரன், மகன் ஆர்.சம்பத்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தே.மு.தி.க.வுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று கூறினார்.