இலங்கை உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகின்றது: இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு!

 US Embassy Sri Lanka Logo

நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மைக்கல் ஏர்வின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தனர்.

இச்சந்திப்பின்போது வடமாகாணசபைத் தேர்தல், இராணுவ பிரசன்னம், தேர்தல் கண்காணிப்பு,  வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இத்தகைய அமெரிக்காவின் செயற்பாடுகள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகவே உள்ளது என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 இதேவேளை இந்த விஜயம் வழமையான ஒன்று எனவும், நாட்டின் அநேக பகுதிகளுக்கு இவ்வாறு தூதரக அதிகாரிகள் விஜயம் செய்வதாகவும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply