நீரா ராடியா தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பேசிய தொலைபேசி பேச்சுக்ககளை ஆய்வு செய்ய குழு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

neeradia.j1pg2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு இடைத்தரகராக இருந்த நீரா ராடியா, பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பேசிய பேச்சுக்கள் பதிவான டேப் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

neeradiaஇந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (21.02.2013) விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்வதற்கு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமனற்ம் உத்தரவிட்டது.

இந்த குழுவில் சி.பி.ஐ.யில் உள்ள உயர் அதிகாரிகள் 5 பேரும், வருமான வரித்துறை அதிகாரி ஒருவரும் உள்ளனர்.

இந்த குழு ராடியா டேப் பதிவுகளை ஆய்வு செய்து 4 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்தது.

Leave a Reply