விளையாட்டு அறிவியலை வலியுறுத்தி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் மாநாட்டில் உரையாற்றினார்.

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தடகளத்தில் ஒலிம்பிக் தங்கம் – ஒரு பில்லியன் கனவு நிறைவேறியது மற்றும் எனது பயணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமது ஒலிம்பிக் பயணம் குறித்தும் பேசிய அவர், இந்தியாவில் ஒட்டுமொத்த விளையாட்டுக்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறித்து பேசினார்.

உலக தடகள சாம்பின்ஷிப் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிக்காக தற்போது பின்லாந்தில் பயிற்சி பெற்று வரும் நீரஜ், இணையதளம் வாயிலாக உரையாற்றினார். விளையாட்டு அறிவியலின் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய அணி தடகள வீரராகவும், உலகத் தரம் வாய்ந்த வீரராகவும் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply